பாகம் 1:
கயிலாய மலையின் தோற்றம்:
இந்த அண்ட சராசரத்திலேயே மிகப்பெரிய உயர்ந்த மலை கயிலாய மலை.அதன் அழகு சிவபெருமான் தன் சடையில் கங்கையையும் நிலவையும் சூடி நெற்றியில் திரு நீற்றையும் சூடி இருப்பது போல் தோன்றும். அவரைக்கான எப்போதும் தேவர்கள் கூட்டம் வந்துகொண்டே இருக்கும். அவ்வாறு அவர்கள் வந்து காணும் போது அவர்களின் கிரீடங்கள் ஒன்றோடொன்று உரசி அதில் உள்ள தங்கத்தின் பொடிகள் இரத்தினத்தின் பொடிகள் கீழே சிந்திக்கிடக்கும்.
சிவபெருமானின் மண்டபம்:
சிவபெருமான் வீற்றிருக்கும் மண்டபம் இந்திரலோக கற்களாலும் வைரத்தூண்களாலும் செய்யப்பட்டது.
அதன் கூரை சந்திரகாந்த கற்களால் ஆனது.
நந்திகேஸ்வரர் தோற்றம்:
மகேசனின் கட்டளைப்படி கயிலாய மலையை காவல் காப்பவர் நந்திகேஸ்வர். அவர் கைகளில் மான் , மழு , பிரம்பு , உடைவாள் அகியவற்றை தாங்கிக் கொண்டும், அவர் தேகம் பிரகாசமான நிலவைப் போன்றும், திரிநேத்திரங்களுடன் நான்கு புயங்கள் இடையில் புலித்தோல் ஆகியவற்றுடன் பார்ப்பதற்கு இவர்தான் சிவபெருமானோ என்று என்னும் அளவிற்கு அவர் தோற்றம் பவளமாய் பிரகாசித்தது.
மோட்சம் பெற வழி யாது?
நந்திகேசுவரர் அருகில் குற்சர், உரோமசர் ,குமுதாற்சர் , சகடாயர் , அகத்தியர் , வற்சர் , வைசம்பாயனர் , கணாசிமுனி , வியாக்கிரபாதர் , வாசுதேவர் , சனகர் , சனர்குமாரர் , வியாக்ரபாதர் , வியாசர் , மதங்கர் , பதஞ்சலி, மார்கண்டேயர் முதலான முனிவர்கள் சூழ்ந்திருந்தனர்.
அப்போது மார்கண்டேயர் நந்திகேசுவரரை நோக்கி வணங்கி
" சுவாமி உயிர் என்பது மின்னலைப்போன்று உடனே தோன்றி அழியும் தன்மை கொண்டது இந்த நிலையற்ற வாழ்வில் தாங்கள் தான் மோட்சம் அடைவதற்கான உரிய உபாயத்தை கூற வேண்டும்"
என்று வேண்டினார்.